பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 11, 2013

கோபம் வந்தால் எப்படி கட்டுப்படுத்துவது...



இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..

அதற்கு பலவழிகள் உண்டு. அவை,

* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள். 

* சிறிது நேரம் மெளனமாக இருங்கள். 

* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள். 

* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள். 

* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள். 

* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். 

* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள். 

* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள். 

* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள். 

* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள். 

* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம். 

* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்....

No comments: