பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 13, 2013

ஃபேஸ்புக்கில் காதல் டூ கல்யாணம் : நடுவுல கொஞ்சம் அக்கவுண்ட காணோம் :)


         ஃபேஸ்புக் வந்தாலும் வந்திச்சு - நம்ம வாழ்க்கையே மாறிப் போய்ச்சு! காலை எழுந்து பாத்ரூம் போனால், கையில் மொபைல் ஃபோனுடனோ, ஐ பேட் போன்ற சாதனங்களுடனோதான் போகிறோம்! அங்கிருந்தே ஃபேஸ்புக் பார்க்கிறது, லைக் பண்றது, கமெண்ட் பண்றது, அப்புறம் காரிலோ, பைக்கிலோ வேலைக்குப் போகும் போது, சிக்னலில் நின்றாலும், அந்த சில விநாடி கேப்பிலும், கையில் மொபைலும், ஃபேஸ்புக்கும் தான்!
இப்படி ஃபேஸ்புக்கே வாழ்க்கை என்று  ஆகிவிட்டது. நமக்கெல்லாம் நிறைய நண்பர்கள் இங்குதான் இருக்கிறார்கள்! அன்பாக பேசி மகிழவும், சண்டை போடவும் என எல்லாத்துக்குமே ஃபேஸ்புக் தான்!
சரி இந்த ஃபேஸ்புக் வந்ததால் - முக்கியமான ஒரு தொழில் கெட்டுப் போய்ச்சு தெரியுமா? அது என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்! அட, கல்யாண புரோக்கர் தொழில் தாங்க! இனி கால் செருப்பு தேய நடக்கவும் வேண்டாம்! சுளையாக புரோக்கர் கமிஷன் தரவும் வேண்டாம்! எல்லாமே ஃபேஸ்புக்கில் பார்த்துக் கொள்ளலாம்!
ஃபேஸ்புக்கில் நண்பர்களாகப் பழகி, காதலர்களாக மாறி, கல்யாணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுது! எனக்குத் தெரிஞ்சு இதுவரை 7 கலியாணம் - ஃபேஸ்புக் கலியாணமாக நடந்துள்ளது - நம்புங்கப்பா!
நேரில் என்றால் ஒரு பெண்ணைப் பார்த்து, பின்னால நாயா பேயா அலைஞ்சு, காதலைச் சொல்லி, அவளிடம் ஏச்சு வாங்கி....... அப்பப்பா எவ்வளவு கஷ்டம்? அதை விட கஷ்டம் பெண்களுக்கு! ஊரிலே ஒரு ஆணைப் பிடித்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம்! அவனிடம் போய் நேரடியாக காதலைச் சொல்லும் தைரியத்தை நாம் இன்னும் பெண்களுக்கு வழங்கவில்லை :) அதையும் மீறி, ஒரு பெண் வலிய வந்து நம்மிடம் காதலைச் சொன்னால், அவளை அருவெறுப்பான ஒரு பார்வை பார்ப்போம்! ஏன்னா, பெண் காதலைச் சொன்னால், அவளை மட்டமாக எடைபோடும் ஒரு வகை மனோநிலை நமக்கு உண்டு! அதிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் என்று தெரியவில்லை!
சரி, ஃபேஸ்புக், பெண்களுக்கு எப்படியான வசதியைக் கொடுத்துள்ளது என்றால், பொதுவாகவே பெண்கள் பேரில் இருந்து ஒரு கமெண்டு போட்டால் போதும்! அங்கே ஆண்கள் கூட்டம் மொய்க்கும்!
டந்தவாரம் ஒரு பெண், “ திங்கட்கிழமைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை” :) அப்டீன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடிருந்தா. அதுக்கு 69 லைக்குகளும், 147 கமெண்ட்ஸும் வந்திருச்சு! அதுல சிலபேரு, அந்தப் பொண்ணு என்னமோ சீரியஸா பேசுறதா நினச்சுக்கிட்டு, “என்னங்க ஆச்சு? நான் வேணும்னா ஹெல்ப்புக்கு வரவா?” என்றெல்லாம்  சமூக அக்கறை மிக்க கமெண்ட்ஸுகள் போட்டு, அது பெரிய கூத்து ஆகிவிட்டிருந்தது! அதுல ஒருத்தர் இது எவ்ளோ பெரிய பின்நவீனத்துவ சிந்தனை தெரியுமா? அப்டீன்னு ஒரு கமெண்டு போட்டிருந்தார்  :)
இப்படி வெட்டியாக எதையாவது பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் ஒவ்வொருவருக்கும் உரிய ஜோடிகள் வந்து சிக்குகிறார்கள்! உங்களுக்கு ஒரு காதலனோ / காதலியோ தேவை என்றால், இட்ஸ் வெரி சிம்பிள்! ஃபேஸ்புக்கிலே சோகம் சோகமா கவிதை போட்டுக்கொண்டு வாங்க! ஒருமாசம் இடைவிடாமல் தொடர்ச்சியா, சலிக்காம போடணும்! அப்புறம் பாருங்க... உங்க கவிதை ரொம்ப சோகமாக இருக்கே? அப்டீன்னு கேட்டு மெஸ்ஸெஜ் வரும்! உடனே நீங்கள் பதில் சொல்லணும் ஆமா என்னோட மனசுல இருக்குறத தானே கொட்டியிருக்கேன் என்று! பின்னர் அது அனுதாபமாகி, காதலாகி, எல்லாம் சரியாக வரும்!
இதை எழுதும் நீ, ஃபேஸ்புக்கிலே என்ன எழுதிக் கிழிக்குறே? என்று நீங்கள் கேட்பீர்கள்! ஹா ஹா நானும் இதைத்தான் பண்றேன்! ஆனா ஒண்ணு! நமக்கு ஆல்ரெடி கல்யாணமாகி, 7 குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பதால்  :), காதல் அது இதுன்னு போறதில்ல - நம்பணும் சொல்லிட்டன்!
நம்மூர்ல, ஒரு கிராமத்துல உள்ள ஒரு பொண்ணுக்கு வரன் பார்க்கச் சொல்லி, கல்யாண புரோக்கர்கிட்ட சொன்னா, அவரு என்ன பண்ணுவாரு ? அந்த சுற்று வட்டாரத்துல உள்ள 18 பட்டியில சுத்தி திரிஞ்சுதானே பொண்ணு பார்ப்பார்! ஆனா ஃபேஸ்புக்குல அப்டி இல்லைங்க! நீங்க ஆண்டிப்பட்டியில இருந்தாலும் உங்களுக்கு காதலனோ / காதலியோ அமெரிக்காவில் கிடைப்பார்கள்!
ஃபேஸ்புக்கிலே பேசி, பழகி காதலிப்பதையோ, கல்யாணம் பண்ணுவதையோ நான் பிழை என்று சொல்லமாட்டேன்! அது ஒரு சோஷியல் நெட்வேர்க் தானே! கல்யாணம்ங்கறதும் ஒரு சோஷியல் அம்சம் என்பதால் - ஃபேஸ்புக் காதல் அங்கீகரிக்கப்பட வேண்டியதே!
அப்புறம் ஒருவரின் எழுத்தைப் பார்த்து, மயங்கி, கிறங்கி மனசைப் பறி கொடுத்துவிட்டு, அப்புறம் ஃபேட்டோவைப் பார்த்த பின்னர் - ஏங்க இது நிஜமாவே நீங்கதானா?அப்டீன்னு 15 வாட்டி ரிப்பீட்டில் கேட்டு கேட்டு, மனம் சோர்ந்து போகவேண்டியும் வரலாம்! - பார்த்து சூதானமா பண்ணுங்க பாஸ்!
அதுபோக, உங்க கூட பேசுறது பொண்ணுதான்னு நம்பி, நீங்க பாட்டுக்கு அத இத அள்ளிவிடுவீங்க! ஆனா மறுபக்கம் இருந்து சிரிச்சு, சிரிச்சு உங்கள் நண்பன் ஒருவன் உங்களுடன் கடலை போடும், கண்கொள்ளா காட்சியும் நடக்கும்! அதுக்கும் எச்சரிக்கையாக இருங்க!
அதுமட்டுமில்லைங்க! சாதாரணமா குழாயடியில் நடக்கும், குடும்பி பிடி சண்டை கூட ஃபேஸ்புக்குல நடக்கும்க! “ நீ எதுக்கு அவள் போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக்கு போட்டே? கமெண்டு போட்டே? என்னை விட அவளா உனக்கு முக்கியம்”மாதிரியான அனல் பறக்கும் வசனங்கள் பலரது சாட்டிங்கில் அடிக்கடி பரிமாறப்படுவதாகக் கேள்வி!
இன்னொரு சுவையான விஷயம்! நீங்க பாட்டுக்கு ஒருத்தர செட் பண்ணி, கதைச்சுப் பேசி, அடுத்தநாள் ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு டெவலப்பாகி வந்திருப்பீங்க! மறுநாள் எந்திரிச்சு - ஐ லவ் யூ சொல்லலாம்னு ஃபேஸ்புக்கைத் திறந்தா - அங்கே உங்க வரும் கால ஜோடியின் புரோஃபைல் காணாமல் போயிருக்கும்! ஸோ, எல்லாத்தையும் மனசுல வைச்சுக்கிட்டு, காரியத்துல இறங்குங்க!
தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, நல்ல பேச்சுத் துணையையும், அன்பான உறவுகளையும் ஃபேஸ்புக் தந்திருக்கு! இப்ப கல்யாணம் கூட இங்கேயே நிச்சயம் ஆகுது! கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுறதா, பெரியவர்கள் சொல்கிறார்கள்! - அந்த சொர்க்கம் ஃபேஸ்புக் தான் :)
ஸோ, ஃபேஸ்புக் காதலர்கள், ஃபேஸ்புக் தம்பதிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! நீங்களும் நல்லா இருக்கணும்! ஃபேஸ்புக்கும் நல்லா இருக்கணும் :)

No comments: