பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 12, 2013

புலியா எலியா??



மனைவிக்கு கணவன் பயப்படுவது ஏன், எதற்கு?`வெளியே புலி. வீட்டில் எலி' - என்று சில ஆண்களை குறிப்பிடுவார்கள். வெளியே வீர சாகசம் செய்வார்கள், எதையும் தட்டிக்கேட்கும் ஆற்றலும் கொண்டவர்களாக சில கணவர்கள் இருப்பார்கள். ஆனால் வீட்டில் மனைவி சொல்வதற் கெல்லாம் ``ஆமாம்...'' போடுவார்கள். மனைவி செய்வது தவறு என்று தெரிந் தால் கூட வாயைத் திறக்காமலே இருந்து விடுவார்கள். சிலரோ இதைவிட எல்லாம் பல படி மேலே சென்று, மனைவியைப் பார்த்தாலே பயத்தில் உதறல் எடுக்கத் தொடங்கி விடுவார்கள். யார் யாருக்கெல்லாம் `மனைவி பயம்' ஏற்படும்? பெண் பார்க்கும்போதே, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஜோடி பொருத்தம் பார்ப்பார்கள். ஜோடி பொருத்தத்தில் இருவரது உடல்வாகு மட்டுமின்றி அழகையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். சுமாரான அழகு கூட இல்லாத கணவனுக்கு, மிக அழகான மனைவி வாய்த்து விடும்போது அங்கே சிக்கல் தோன்றி விடும் வாய்ப்பு அதிகம். ``தனது அழகான மனைவியை தட்டிக்கேட்டால், அவள் தன் மீது கோபித்துக்கொண்டு தன்னை பிரிந்து சென்று விடுவாள்' என்று பயந்து இப்படிப்பட்ட கணவன்மார், மனைவி சொல்லே மந்திரம் என்று தலையாட்டி பொம்மைகளாக இருப்பார்கள். சில நேரங்களில் மனைவி செய்யும் தவறை தட்டிக்கேட்கக்கூட இவர்களுக்கு தைரியம் இருக்காது. இப்படிப் பட்டவர்களில் பலர், திரு மணத்திற்கு முன்பு குடிகாரர்களாய் இருந்து, பின்பு திருந்தி இருக்கிறார்கள். அழகான மனைவி வாய்க்கும் போது, பயந்து காணப்படுவதைப்போல அதிகமான வரதட்சணை வாங்கிக்கொண்டு பயப்படும் கணவன் மார்களும் உண்டு. இவர்களும் மனைவிக்கு அடங்கியே நடப்பார்கள். மனைவியிடம் வாக்குவாதம் செய்தாலோ, சண்டை போட்டாலோ மனைவி மூலம் கிடைக்கும் சுகபோகமும், செல்வமும் கையை விட்டு போய்விடும் என்று பயம் கொள்வார்கள். சில வகை வெளியே தெரியாத ஊனங்களை கொண்டவர்களும் மனைவிக்கு மனதளவில் பயப்படுவார்கள். மனைவியை பகைத்துக்கொண்டால், தனது பல கீனங்களை எல்லாம் வெளியே சொல்லி விடுவாள் என்று அவர்கள் பயப்படு வார்கள். இந்த பலகீனங்களில் செக்ஸ் பலகீனம் கூட இடம்பெறலாம். எல்லா விஷயங்களைப் பற்றியும் கணவனும் மனைவியும் மனந்திறந்து பேச வேண்டும். அதற்குரிய பக்குவம் இருவருக்குமே தேவை. `மனைவியிடம் பேசினாலே சண்டைதான் வரும்' என்று சில ஆண்கள் சொல்வார்கள். இப்படிச் சொல்பவர்களில் பலரும் மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பார்கள். சிலர் தனது சொந் தக்காரர்களிடம், குடும்பத்தினரிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்களின் செயல், மனை விக்கு தெரிந்திருக்கும். அந்த குற்றத்தை மனைவி உற் றார் உறவினர்களிடம் சொல்லக் கூடாது என்பதற்காக, மனைவிக்கு பயந்து நடுங் குகிறவர்களும் உண்டு. ஆண்களில் சிலருக்கு தன் சுய நலத்தைவிட குழந்தைகள் நலம் முக்கியமாகத் தெரியும். மனைவி தவறு செய்கிறாள் என்பது தெரிந்தும், அந்த தவறை சுட்டிக்காட்டினால் குடும்பத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு, அது குழந் தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற பயத்துடன் வாழ்க்கையை கழிப்பவர்களும் உண்டு. சில பெண்கள் வன்முறை எண்ணம் கொண் டவர்களாக இருப்பார்கள். கணவர் நல்லது சொன்னால் கூட சுவரில் முட்டுவது, நெஞ்சில் குத்துவது, ஓ...வென்று அழுது ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். மனைவிக்கு காயமும், தனக்கு பணச் செலவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்துடன் வாழும் கணவர்களும்இருக்கிறார்கள்.

No comments: