
அனைவரினதும் எதிர்ப்பிற்கு மத்தியில் காதலிக்கும் காதலர்களின் உண்மை சம்பவம்...(சுருக்கமாக...)
இருவரும் ஒரே வேலைத்தளத்தில் தான் பணி புரிகிறார்கள்... இருந்தும் இருவரும் காதலர்களென்பது சக பணியாளர்களுக்கு தெரியாது...! அவள் அவனிடம் ஒரு சின்ன விடயத்தை கூட மறைக்காமல் பகிர்ந்து விடுவாள்...ஆனால் அவனோ ஒரு சின்ன விடயத்தை கூட பகிர்ந்து கொள்ள மாட்டான்... எனினும் காதலன் அவளுக்கு பிடிக்காத விடயங்களை தான் செய்ய மாட்டேன் என அவளின் தலையில் அடித்து சத்தியம் வேறு செய்து கொண்டான்...!
இந்நிலையில் தன் காதலி தன் மேல் எவ்வளவு அக்கறை உடையவள் என்பதை அறிவதற்காக விளையாட்டு தனமாக அவளுக்கு பிடிக்காத விடயங்களை செய்யத்தொடங்கினான்...! இது அவளை மிகவும் புண்படுத்தியது...! எத்தனையோ தடவைகள் சொல்லியும் அவன் அவள் முன் தலையாட்டி விட்டு மறு நிமிடமே தன் விளையாட்டு தனத்தை தொடங்கினான்...! அதே போல் சக பெண்களுடனும் மிக நெருக்கமாக பழகினான்...!
தன் முன் தமது காதலனோ காதலியோ அவ்வாறு நடந்து கொள்வதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..இது உலகறிந்த உண்மை... யாரும் மறுக்கவும் முடியாது.
இது விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அவளை தினமும் அழவைப்பதே வாடிக்கையாகி விட்டது...காரணம் இன்றி கோவிப்பதும், சண்டை போடுவதும் அவளை மிகவும் காயப்படுத்தியது...
இந்த விளையாட்டே ஒரு நாள் வினையாக மாறி விட்டது...!
அது அவ்வாறு இருக்க அங்கு பணி புரியும் சக பெண் அவனை நேசிக்க தொடங்கி விட்டாள்... அப்பெண் தன் காதலை வெளிப்படுத்துவதற்காக அவனின் Diaryன் முன் பக்கத்தில் அவன் பெயரையும் தன் பெயரையும் சேர்த்து எழுதியிருந்தாள்.... இதனை அவன் கவனிக்கவே இல்லை...
விளையாட்டாக இருந்தாலும் சத்தியத்திற்கு சக்தி அதிகமென்பது ஒரு நாள் தெரிந்து விட்டது...!
ஒரு நாள் அவனின் Diary யை பார்த்த காதலி அதிர்ந்து போனாள்... தன்னை அவன் விட்டு விலத்துவதற்காகவே அவ்வாறெல்லாம் நடந்து கொண்டான் என எண்ணி அவனுக்கு ஒரு கடிதத்தில் நீ தேர்ந்தெடுத்திருப்பவள் உனக்கு மிகவும் பொருத்தமானவள் என வாழ்த்து சொல்லி அதே Diaryல் வைத்து விட்டு அழுது கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்...!
அவள் அழுது அழுது ஏதோ ஒன்றை தன் டயரியில் வைத்ததை கண்ட காதலன் உடனே சென்று அதனை வாசித்தான்... தன் விளையாட்டுக்கள் அனைத்தையும் சொல்லுவதற்காக தன் காதலியை அண்மிக்கும்போது அவன் கண் முன்னாடியே வீதியை கடக்கும் போது அவளின் உடல் வேகமாக வந்த லொறியின் முன் சில்லில் நசுங்கியது....!
சிதறிய தன் காதலியை கண்டு துடித்தான் குளறினான்...! இருந்தும் என்ன பயன்...?
அவள் ஆசையாக கேட்ட முத்த சின்னங்களை சிதறிய உடலின் எந்த பாகத்தில் பதிப்பான்....?
யாரென்று இனி அழைப்பது...? அழைத்தாலும் அவள் தான் வர போகிறாளா...?
இனி அவனின் விளையாட்டு தனத்தை யாருடன் விளையாடுவான்...? யாருடன் சண்டை போடுவான்...? யாருடன் கோவிப்பான்...?
இக்கதையை வாசிக்கும் நண்பர்களே....
இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...! காதலிக்கும் இதயங்கள் அக்கறையின்றி இருப்பதும் இல்லை...உங்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் இருப்பதும் இல்லை...!நீங்கள் உங்களின் அன்பானவர்களை சோதியுங்கள்... ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்திருங்கள்...!
இருவரும் ஒரே வேலைத்தளத்தில் தான் பணி புரிகிறார்கள்... இருந்தும் இருவரும் காதலர்களென்பது சக பணியாளர்களுக்கு தெரியாது...! அவள் அவனிடம் ஒரு சின்ன விடயத்தை கூட மறைக்காமல் பகிர்ந்து விடுவாள்...ஆனால் அவனோ ஒரு சின்ன விடயத்தை கூட பகிர்ந்து கொள்ள மாட்டான்... எனினும் காதலன் அவளுக்கு பிடிக்காத விடயங்களை தான் செய்ய மாட்டேன் என அவளின் தலையில் அடித்து சத்தியம் வேறு செய்து கொண்டான்...!
இந்நிலையில் தன் காதலி தன் மேல் எவ்வளவு அக்கறை உடையவள் என்பதை அறிவதற்காக விளையாட்டு தனமாக அவளுக்கு பிடிக்காத விடயங்களை செய்யத்தொடங்கினான்...! இது அவளை மிகவும் புண்படுத்தியது...! எத்தனையோ தடவைகள் சொல்லியும் அவன் அவள் முன் தலையாட்டி விட்டு மறு நிமிடமே தன் விளையாட்டு தனத்தை தொடங்கினான்...! அதே போல் சக பெண்களுடனும் மிக நெருக்கமாக பழகினான்...!
தன் முன் தமது காதலனோ காதலியோ அவ்வாறு நடந்து கொள்வதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..இது உலகறிந்த உண்மை... யாரும் மறுக்கவும் முடியாது.
இது விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அவளை தினமும் அழவைப்பதே வாடிக்கையாகி விட்டது...காரணம் இன்றி கோவிப்பதும், சண்டை போடுவதும் அவளை மிகவும் காயப்படுத்தியது...
இந்த விளையாட்டே ஒரு நாள் வினையாக மாறி விட்டது...!
அது அவ்வாறு இருக்க அங்கு பணி புரியும் சக பெண் அவனை நேசிக்க தொடங்கி விட்டாள்... அப்பெண் தன் காதலை வெளிப்படுத்துவதற்காக அவனின் Diaryன் முன் பக்கத்தில் அவன் பெயரையும் தன் பெயரையும் சேர்த்து எழுதியிருந்தாள்.... இதனை அவன் கவனிக்கவே இல்லை...
விளையாட்டாக இருந்தாலும் சத்தியத்திற்கு சக்தி அதிகமென்பது ஒரு நாள் தெரிந்து விட்டது...!
ஒரு நாள் அவனின் Diary யை பார்த்த காதலி அதிர்ந்து போனாள்... தன்னை அவன் விட்டு விலத்துவதற்காகவே அவ்வாறெல்லாம் நடந்து கொண்டான் என எண்ணி அவனுக்கு ஒரு கடிதத்தில் நீ தேர்ந்தெடுத்திருப்பவள் உனக்கு மிகவும் பொருத்தமானவள் என வாழ்த்து சொல்லி அதே Diaryல் வைத்து விட்டு அழுது கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்...!
அவள் அழுது அழுது ஏதோ ஒன்றை தன் டயரியில் வைத்ததை கண்ட காதலன் உடனே சென்று அதனை வாசித்தான்... தன் விளையாட்டுக்கள் அனைத்தையும் சொல்லுவதற்காக தன் காதலியை அண்மிக்கும்போது அவன் கண் முன்னாடியே வீதியை கடக்கும் போது அவளின் உடல் வேகமாக வந்த லொறியின் முன் சில்லில் நசுங்கியது....!
சிதறிய தன் காதலியை கண்டு துடித்தான் குளறினான்...! இருந்தும் என்ன பயன்...?
அவள் ஆசையாக கேட்ட முத்த சின்னங்களை சிதறிய உடலின் எந்த பாகத்தில் பதிப்பான்....?
யாரென்று இனி அழைப்பது...? அழைத்தாலும் அவள் தான் வர போகிறாளா...?
இனி அவனின் விளையாட்டு தனத்தை யாருடன் விளையாடுவான்...? யாருடன் சண்டை போடுவான்...? யாருடன் கோவிப்பான்...?
இக்கதையை வாசிக்கும் நண்பர்களே....
இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...! காதலிக்கும் இதயங்கள் அக்கறையின்றி இருப்பதும் இல்லை...உங்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் இருப்பதும் இல்லை...!நீங்கள் உங்களின் அன்பானவர்களை சோதியுங்கள்... ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்திருங்கள்...!









No comments:
Post a Comment