பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


February 16, 2013

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்--அமுத மொழிகள்,



நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:


* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த 
நேரிட்டால், அந்த வேலையில் அவர்களுக்கு நீங்கள் துணைபுரியுங்கள். 

* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.

* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! 
உங்களுக்குக் கீழிருந்தவர்கள் குறித்து உங்கள்  ஒவ்வொருவரிடமும் வினவப்படும். பணியாட்கள் தன் எஜமானனின் பொருட்களுக்கு பாதுகாவலன் ஆவான். அவர்களின் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவார்கள். 

* நாம் பொறுப்பில் அமர்த்தி உள்ள ஒருவர்  நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும் அல்லது அதைவிடச் சிறியதொரு பொருளை மறைத்தாலும் அதனை அவர்கள் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனைச் சுமந்த வண்ணம் வருவார். 

* ஒருவன் தன் கையால் உழைப்பதும் மோசடி  செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம். 

No comments: