பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


February 17, 2013

தீன்குலப் பெண்களே! உங்களைத்தான்!

                             

                           அஸ்ஸலாமு அலைக்கும்






அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைப்பிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
'இவ்வுலகம முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் சிறந்நது நல்லொழுக்க முள்ள பெண்ணாவாள். ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்­ம் (2668)

வீதியில் செல்லும்போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும்
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24 : 31)

பர்தாஅணிந்துதான் வெளியே செல்லவேண்டும்.

  

அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)

. நபியே! (முஹம்மதே!) உமது மனை வியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான் (அல்குர்ஆன் 33 : 59)

தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்­ம் 3971)

கால்களில் ஒ­li எழுப்பும் சலங்கைகள் அணிந்து வெளியில் செல்லக்கூடாது

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24 : 31)

பள்ளிவாசலுக் செல்லும் போது வாசனைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்களாகிய நீங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது நறுமணம் பூசாதீர்கள் (முஸ்­ம் 759)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்களே) நீங்கள் இஷாத்தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள். (முஸ்­ம் 758)

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33 : 32,33)

தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியக் கூடாது

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33 : 32,33)

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்­ம் 2611 )

பெண்கள் தவிர்க்கவேண்டியவை

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் ஆகியோரின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4886)
ஒட்டு (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் (புகாரி 4887)

தனியாகப் பயணம் செய்வதற்குரிய நிபந்தனை

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஒரு இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது. நூல் : புகாரி (1088)

பெண்களே அதிகமாக தர்மம் செய்வீர்

நபி (ஸல்) அவர்கள் பெண்கள் சமூகமே தான தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே ஏன்? என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள். மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறுயாரையும் நான் காணவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 304 )
 — 

February 16, 2013

சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும் ..




விரல் நுனியில் உலகம் !







இந்திய அரசு வெளியிட்டுள்ள NRI களுக்கான 12X7 Help Line--GOVERNMENT LINKS



இந்திய அரசு வெளியிட்டுள்ள NRI களுக்கான 12X7 Help Line
பயனுள்ள தகவல்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய அரசு 12X7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது:

தொலை பேசி எண்:
1800113090
911140503090

ஆன்லைனில் புகார் அளிக்கலாம் வாங்க --உங்களுக்கு உதவும் சட்டங்கள்



நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன.குடிநீர்,சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம்.நம் ஊரில் உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகரிகளிடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும்.செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சனைகளை உயர் அதிகரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள்.ஆனால் அனைவராலும் இதை செய்ய முடியாது.ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் கலெக்டர் தான்.ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும்.இதனால் பெரும்பாலானவர்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை.
ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டதிலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர்.அவர்களுக்காக.ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை:

இதற்கு முதலில் http://www.tn.gov.in/services/GDP/index.asp என்ற தளத்திற்கு செல்லுங்கள்.ஒருவிண்டோ வரும்.அதில் வலது பக்க சைடு பாரில் Selectஎன்ற சிறிய கட்டம் இருக்கும்.அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கபட்டுள்ளது.மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

உங்கள் மாவட்டதிற்கு தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.அந்த விண்டோவில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியாரை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதை குறித்துக் கொண்டும் இமெயில் அனுப்பலாம்.அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.

இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள்.அதை குறித்துக் கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உங்களின் அறியலாம்.
கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாவிட்டால்,அந்த கோரிக்கை எண் வைத்து நீதி மன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.

என்னங்க புகார் கொடுக்க தயாரா இருக்கீங்களா?